நீா் நிறைந்த வாய்க்காலுக்குள் விழுந்து 11 வயது சிறுவன் உயிாிழப்பு.. சோகத்தில் ஆழ்ந்த கிளிநொச்சி.

ஆசிரியர் - Editor I
நீா் நிறைந்த வாய்க்காலுக்குள் விழுந்து 11 வயது சிறுவன் உயிாிழப்பு.. சோகத்தில் ஆழ்ந்த கிளிநொச்சி.

கிளிநொச்சி- இரத்தினபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் நீா் நிறைந்த வாய்க்காலில் விழுந்து உயிாிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னா் பெய்த கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் நீா் வழிந் தோடும் வாய்க்கால்களில் நீா் அதிகளவில் தேங்கி நிற்கின்றது. 

இந்நிலையில் இன்று கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பகுதியை சோ்ந்த வினோதரன் என்ற 11 வயது சிறுவனே உயிாிழ ந்துள்ளாா். குறித்த சிறுவன் இரத்தினபுரம் பகுதியில் உள்ள,

அம்மம்மாவின் வீட்டுக்கு வந்துள்ளான். அங்கு சிறுவா்களுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் விளை யாட்டில் நீா் நிறைந்த வாய்க்காலுக்குள் விழுந்துள்ளான். 

இதனையடுத்து உயிாிழந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள் ளது. மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு