ஈபிடிபியும் இந்திய துணைத்தூதரிடம் சரண்!

ஆசிரியர் - Admin
ஈபிடிபியும் இந்திய துணைத்தூதரிடம் சரண்!

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலிற்கான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதர் ஆர்.நடராஜனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா சார்பில் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவால் தேர்தல் விஞ்ஞாபனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

இந்திய மத்திய அரசிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று கோரிக்கை விடுத்ததன் நிமிர்த்தம் ஐம்பதினாயிரம் வீட்டுத்திட்டம், யாழ்.மற்றும் மன்னார் நோக்கிய புகையிரதப்பாதை, யாழ் நகர மத்தியில் கலாச்சார மண்டபம், கைதடி பனை ஆராய்ச்சி நிலையம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை மற்றும் மனிதாபிமான உதவிப்பணிகள் என தமது மக்களுக்கு இந்திய அரசால் வழங்கி வைக்கப்பட்டது.

இவைகளுக்கு நன்றி கூறும் ஓர் மரியாதை நிமிர்த்தமும் நடராஜன் அவர்களின் சிறந்த நல்லெண்ண செயற்பாடுகள் காரணமாகவுமே கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை யாழ் இந்திய துணை தூதர் ஆர்.நடராஜனிடம் கையளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு