வடமாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56867 ஆக உயர்வு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56867 ஆக உயர்வு..

வடமாகாணத்தில் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 17559 குடும்பங்களை சேர்ந்த 56867 பேராக காணப்படுகின்றது. 

அவர்­க­ளில் 4 ஆயி­ரத்து 398 குடும்­பங்­கள் 58 இடைத்­தங்­கல் முகாம்­க­ளில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ ள­னர். வடக்கு மாகா­ணத்­தில் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யும், சனிக்­கி­ழ­மை­யும் 

கன மழை பெய்­தது. அத­னால் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­  கின. அந்த மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் கடும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்­ட­னர்.

யாழ்ப்­பா­ணம், மன்­னார், வவு­னியா மாவட்­டங்­க­ளி­லும் மக்­கள் இடர்­களை எதிர்­கொண்­ட­ னர். வெள்­ளத்­தால் இடம்­பெ­யர்ந்த மக்­கள் இடைத்­தங்­கல் முகாம்­க­ளில் தங்க வைக்­கப்­பட்­ட­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 10 ஆயி­ரத்து 889 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 35 ஆயி­ரத்து 808 பேர் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர்.

அவர்­க­ளில் 2 ஆயி­ரத்து 765 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 9 ஆயி­ரத்து 201 பேர் 22 இடைத்­தங்­கல் முகாம்­க­ளில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்  

என்று கிளி­நொச்சி மாவட்­டச் செய­லர் சுந்­த­ரம் அரு­மை­நா­ய­கம் தெரி­வித்­தார். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 6 ஆயி­ரத்து 254 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 19 ஆயி­ரத்து 841 பேர் 

பாதிப்­ப­டைந்­துள்­ள­னர். அவர்­க­ளில் ஆயி­ரத்து 631 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 2 ஆயி­ரத்து 765 பேர் 22 இடைத்­தங்­கல் முகாம்­க­ளில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர் 

என்று முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லர் திரு­மதி ரூப­வதி கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார். மன்­னார் மாவட்­டத்­தில் 38 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 110 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­கள் இடைத்­தங்­கல் முகா­மில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். யாழ்ப்­பா­ணம் குடா­நாட்­டில் 278 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 708 பேர் பாதிப்­புக்­குள்­ளாகி இடம்­பெ­யர்ந்­துள்­ள­னர் 

என்று யாழ்ப்­பா­ ணம் மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார். இடைத்­தங்­கல் முகாம்­ க­ளில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கான உட­னடி உத­வி­கள் 

இடர் முகா­மைத்­துவ நிலை­யத்­ தா­லும், பொது அமைப்­புக்­க­ளா­லும், தன்­னார்­வத் தொண்­டர்­க­ளா­ லும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான உட­னடி உத­வி­களை வழங்­குங்­கள் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­ பால சிறி­சே­ன­வும் அதி­கா­ரி­க­ளுக்­குப் பணிப்­புரை விடுத்­துள்­ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு