கிளிநொச்சி மாவட்டத்தில் 51 கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு.. வழங்கும் உதவிகளை பகிா்ந்து வழங்குங்கள்.

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் 51 கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு.. வழங்கும் உதவிகளை பகிா்ந்து வழங்குங்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் அமைப் புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் அந்த உதவிகளை நகரை அண்டி பகுதிகளில் உள்ள ம க்களுக்கு மட்டும் வழங்காமல் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் பகிா்ந்து வழங்குங்கள். 

மேற்கண்டவாறு கிளிநொச்சி மாவட்ட செயலகம் உதவி வழங்கும் அமைப்புக்கள், அரசியல்கட்சி கள், பொதுமக்கள் என அனைவாிடமும் கேட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 51 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிமாவட்டங்களிலிருந்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் என பல வழிகளில் உதவிகள் தொடா்ச் சியாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. 

ஆனால் குறித்த உதவிகள் பெருமளவுக்கு நகருக்கு அண்மையாக அமைந்துள்ள நலன்புரி நிலை யங்களுக்கே அதிகம் சென்றடைகிறது. மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள பல வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மக்கள் தங்கியுள்ள இடங்களுக்கு 

போதுமான உதவிகள் கிடைக்கவில்லை. உதவிகளை வழங்குகின்ற தரப்புக்கள் மாவட்ட அனர் த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று அதற்கமை வாக உதவிகளை வழங்குமாறு கேட்கப்படுகிறீா்கள். 

உதவிகள் மேற்கொள்கின்றவர்கள் அனைவரும் ஒரே வகையான உதவிகள் வழங்குவதனை தவிர்க்கும் வகையிலும் மக்களின் தேவைகளை கருத்தில் எடுத்து எல்லா மக்களுக்கும் உதவிகள் சென்றடைவதனை நோக்காக கொண்டும் 

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் ஊடாக தொடர்புகளை கொண்டு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு