வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவுங்கள். அரச இயந்திரத்திற்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவுங்கள். அரச இயந்திரத்திற்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு..

வடமாகாணத்தில் வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையா ன வசதிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 

உரிய பிரிவுகளு்ககு உத்தரவு வழங்கியுள்ளார். அதற்கு அவசியமான நிதியை உடனடியாக மாவட்ட செயலாளர்களுக்கு விடுவிக்குமாறு உரிய பிரிவுகளுக்கு 

ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து நிவாரண நடவடிக்கைகளை 

முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை, வெள்ளம் காரணமாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு