தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெற தயங்கும் தமிழ் அரசியல்வாதிகள்

ஆசிரியர் - Editor II
தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெற தயங்கும் தமிழ் அரசியல்வாதிகள்

வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிங்களக் காவல்துறையினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்துறை- கரம்பனில் இருந்து, அனலைதீவு, எழுவைதீவுக்கான புதிய படகுச் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வடக்கு அரசியல்வாதிகள் தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தயங்குகின்றனர். சிங்கள காவல்துறையினரே அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

சிங்கள காவல்துறை அதிகாரிகள் மீதே தமிழ் அரசியல்வாதிகள் நம்பிக்கை வைத்துள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு