விக்கினேஷ்வரன் உதயசூரியனில்

ஆசிரியர் - Editor II
விக்கினேஷ்வரன் உதயசூரியனில்

அடுத்த வடமாகாண சபைத் தேர்தலின் போது, வடக்கின் தற்போதைய முதலமைச்சர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் சார்ந்த நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரெலோ மற்றும் புளட் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகவே அமையும்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா போட்டியிடுவார்.

அவரை எதிர்த்து தற்போதைய முதலமைச்சர், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனின் கருத்தைப் பெற முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு