மீள்குடியேறி பல மாதங்களான பின்னரும் இரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..

ஆசிரியர் - Editor I
மீள்குடியேறி பல மாதங்களான பின்னரும் இரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..

கிளிநொச்சி- இரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் மீள்குடியேறிய மக்கள் மிகுந்த துன்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

மேற்கண்டவாறு கிளிநொச்சி- பூநகரி கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் பிறான்சிஸ் ஜோசப் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், இரணைதீவு மிக நீண்டகாலம் கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த நிலையில் மக்கள் சுயமாக படகுகளில் சென்று தமது பூர்வீக வாழ்விடமான இரணைதீவில் மீள்குடியேறிருந்தனர். 

மீள்குடியேறிய காலம் தொடக்கம் அந்த மக்கள் பழைய பாடாலை கட்டிடங்களிலும், தேவாலய கட்டிடங்களிலும் தங்கியிருக்கின்றனர். இன்றுவரை அவர்களுக்கு அரை நிரந்தர வீடுகள் கூட வழங்கப்படவில்லை. மேலும் மலசகூடங்கள், 

குடிநீர் போன்ற வசதிகளும் கூட பூரணமாக வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. மக்கள் வீட்டுதிட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத் திருந்தபோது இதுவரை எந்த வசதிகளும் வழங்கப்படாத நிலையில் 

மிக துன்பமான வாழ்க்கையை அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் தொழில்ரீதியாக கடற்றொழிலை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் தாங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்களில் செய்து வந்த சிறிய தொழில்களை 

மிக குறைந்தளவு வளங்களுடன் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பொறுப்புவாய்ந்த வர்கள் அந்த மக்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு