யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மோதல், 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மோதல், 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..


யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட நான்காவது மற்றும் இரண்டாவது வருட மாணவர்களுக்கிடையில் நேற்று இரவு மோதல் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நான்காவது வருட மாணவர்களால் இரண்டாவது வருட மாணவர்களுக்கு பகிடிவதை வழங்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட வாய்த்தகராறின் காரணமாகவே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை காயங்களுக்குள்ளான மாணவர்களால் தாக்கிய குறித்த மாணவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸ் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு