இடித்து அகற்றப்பட்ட டீ.எஸ்.சேனநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகியோாின் நினைவு கல்லை மீள நிறுவுங்கள். ஆளுநா் பணிப்பு..

ஆசிரியர் - Editor I
இடித்து அகற்றப்பட்ட டீ.எஸ்.சேனநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகியோாின் நினைவு கல்லை மீள நிறுவுங்கள். ஆளுநா் பணிப்பு..

இரணைமடுகுளத்தில் 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளார். 

இரணைமடு புனரமைக்கப்படடதன 1954ம் ஆண்டு; பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் பதிக்கப்பட்ட நினைவுக்கல் நிறுவப்பட்டடிருந்தது. 

அண்மையில் ஜனாதிபதி  வருகைக்கு முன்பதாக குறித்த நினைவுக்கல் அகற்றப்பட்டமை தொடர்பான செய்தி ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதனையடுத்து விரைவாக குறித்த நினைவு கல்லினை மீளவும் இருந்த இடத்தில் நிறுவுமாறு ஆளுநர் பணித்துள்ளார். இதன் பணிகளை எதிர்வரும் புதன்கிழமை ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு