முகமூடி அணிந்த 8 நபர்கள் யாழ் துன்னாலை காட்டுப் பகுதியில் செய்த அட்டகாசம்
முகமூடி அணிந்த 8 நபர்கள் கடமை முடிந்து சென்ற பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை முகாமையா ளர்களைத் தாக்கி அவர்களிடமிருந்த பணம், அலைபேசி, ஆவணங்கள் ஆகியவற்றை அபகரித்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் கனகன்புளியடி – துன்னாலைச் சாலையில் கப்பூது காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை முகாமையாளர்களாக் கடமையாற்றும் வடமராட்சி கரணவாய் மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் வழமை போல கிளைகளை மூடியபின்னர் இரு மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தனர்.
இரவு வேளையில் சாலையில் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்களை பற்றைப் பகுதியான இடத்தில் முகமூடி அணிந்திருந்த மூவர் வழிமறித்தனர்.
ஆயுதங்களாலும் பொல்லுகளாலும் தாக்கி விட்டு அவர்களிடமிருந்த பணம், மோட்டார் சைக்கிள் ஆவணங்கள், தேசிய அடையாள அட்டை, அலைபேசிகள் ஆகியவற்றை அபகரித்துச் சென்றனர்.
அதன்பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு சென்ற வேளையில் குறித்த நபர்கள் மீளவும் பின்தொடர்ந்த னர்.
தாக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் தலைமைப் பீடத்துக்கு தகவல் வழங்கினர். பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.