கொப்பி, புத்தகம் தருவதாக கூறி சிறுவா்களை அழைத்து வந்து போராட்டம் நடாத்திய மஹிந்த ஆதரவாளா்கள்..

ஆசிரியர் - Editor I
கொப்பி, புத்தகம் தருவதாக கூறி சிறுவா்களை அழைத்து வந்து போராட்டம் நடாத்திய மஹிந்த ஆதரவாளா்கள்..

மட்டக்களப்பு- வவுணதீவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடா்பில் கண்டனம் தொிவிப்பதற்காக இன்று யா ழில் இடம்பெற்ற கவனயீா்ப்பு போராட்டத்திற்காக பா டசாலை உபகரணங்கள் தருவதாக கூறி மக்களை ஏ மாற்றி அழைத்து வந்த மஹிந்த ராஜபக்ஸவின் கட்சி யின் ஏமாற்றுவேலை அம்பலமாகியுள்ளது. 

யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலைத்திற்கு முன்பாக இன்று காலை பொதுஜனபரமுன கட்சியனரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இப் ஆர்ப்பாட்டத்தில் ஒரு சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட போதும், பொதுஜன பரமுன கட்சி சார்ந்தவர்களும், சிறுவர்களும் அதிகளவில் பங்கு கொண்டிருந்தனர். 

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள் பங்கு கொண்டதை அடுத்து, அச் சிறுவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கான காரணம் என்ன என வினாவிய போது, 

தமக்கு எதற்காக பஸ் நிலையம் வந்தோம் என்று தெரியாது என்றும், கொப்பி, புத்தகங்கள் தருவதாக கூறியே எங்களை அழைத்து வந்தார்கள் என்றும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு