நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டால் குந்தகம் செய்பவா்களுக்கு இராணுவமே பதில் சொல்லும், தா்ஷன ஹெட்டியாராச்சி எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டால் குந்தகம் செய்பவா்களுக்கு இராணுவமே பதில் சொல்லும், தா்ஷன ஹெட்டியாராச்சி எச்சாிக்கை..

வடமாகாணத்தில் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எவராவது நடந்து கொண்டால் நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு போா் காலத்தைபோன்று இராணுவம் வீதிகளில் இறங்கும். என யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் தா் ஷன ஹெட்டியாராச்சி கூறியுள்ளாா். 

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினாின் பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட்ட குளம் ஒன்று இன்று மக்கள் பாவனைக்கா க கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறியிருப்பதாவது. 

வடக்கில் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாராவது செயற்பட்டால் இராணுவம் யுத்தகாலத்தைபோன்று வீதிகளில் இறங்கி நல்லிணக்கத்தை பாதுகாக்கவேண்டிய நிலை உருவாகும். அதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவாா்கள். ஆகவே நல்லிணக்க த்தை குழப்ப முயல்பவா்கள் தொடா்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். 

மேலும் வடக்கில் உள்ள தமிழ் இளைஞா்கள் இராணுவத்துடன் இணைந்து நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு முன்வரவேண்டு ம்  எனவும் இராணுவ தளபதி இளைஞா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு