யாழில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்! இளைஞன் உடல்கருகி பரிதாபமாக பலி

ஆசிரியர் - Editor II
யாழில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்! இளைஞன் உடல்கருகி பரிதாபமாக பலி

யாழ்.அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தமையால் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

இளைஞர் ஒருவர் மோட்டார் கைக்கிளிலில் இன்று மாலை சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் மற்றும் வைத்தியசாலையில் நின்றவர்கள் ஒன்றிணைந்து தீயை அணைக்க முயற்சித்த போதும் தீ தொடர்ச்சியாக எரிந்ததில் இளைஞர் உடல்கருகி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு