தமிழீழ மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் - இன்று ஆரம்பம்!!

ஆசிரியர் - Editor I
தமிழீழ மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் - இன்று ஆரம்பம்!!

 

தமி­ழீழ இலட்­சி­யத்­துக்­காகத் தமது இறுதி மூச்­சு­வரை போராடி, கள­மாடி வீரச் சாவ­டைந்த வீர­ம­ற­வர்களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் வார நினை­வேந்­தல் நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வட­கி­ழக்கு மண்­ணில் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றன. 

கடந்த ஆண்டு தாயக தேசத்­தில் பெரும்­பா­லான மாவீ­ரர் துயி­லும் இல்­லங்க­ளில் மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல்­கள் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன. தற்­போது நாட்­டில் எழுந்­துள்ள அர­சி­யல் நெருக்­கடி - குழப்­பங்­க­ளிற்கு மத்­தி­யி­லும், மாவீ­ரர் நாள் நினை­வேந்­த­லைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு, தமி­ழர் தேசம் எழுச்­சி­யு­டன் தயா­ரா­கி­யுள்­ளது. 

2009ஆம் ஆண்டு போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்ட பின்­னர், மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் இரா­ணு­வத்­தி­ன­ரால் இடித்­த­ழிக்­கப்­பட்­டது. மாவீ­ரர் வாரத்தை நினை­வு­கூர முடி­யா­த­ள­வுக்கு நெருக்­க­டி­க­ளும் - கெடு­பி­டி­க­ளும் தமிழ் மக்­கள் மீது பிர­யோ­கிக்­கப்­பட்­டன. 

2016ஆம் ஆண்டு, பகி­ரங்­க­மாக மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் நடத்­தப்­பட்­டது. தமி­ழீழ தேசத்­தில் முக்­கி­ய­மான மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளில், மாவீ­ரர் பெற்­றோர்­க­ளின் கண்­ணீர்க் கத­ற­லு­டன் நினை­வேந்­தல் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. கடந்த ஆண்­டும் மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் தாயக தேசத்­தில் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. 

இந்த ஆண்­டும் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் மாவீ­ரர் வாரத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு தயா­ரா­கி­விட்­டன. கடந்த சில வாரங்­க­ளா­கவே துப்­பு­ர­வுப் பணி­கள் மக்­க­ளால் மும்­மு­ராக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. 

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பு, தமி­ழீழ விடு­த­லைக்­கா­கப் போராடி மடிந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் வாரத்தை 1989ஆம் ஆண்­டி­லி­ருந்து கடைப்­பி­டித்து வரு­கின்­றது. ஒவ்­வொரு ஆண்­டும் நவம்­பர் மாதம் 21ஆம் திக­தி­யி­லி­ருந்து 27ஆம் திகதி வரை மாவீ­ரர் வாரம் கடைப்­பி­டிக்­கப்­ப­டும். 

நவம்­பர் 26ஆம் திகதி தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் பிறந்த நாள் கொண்­டா­டப்­ப­டும். மறு­நாள் நவம்­பர் 27ஆம் திகதி, மாவீ­ரர் நாள் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­ப­டும். 

அன்­றைய தினம் தேசி­யத் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் மாவீ­ரர் தின உரை முடி­வ­டை­யும் தரு­ணம், மாலை 6.05 மணிக்கு ஆலய மணி ஒலிக்க விடப்­பட்டு, மாவீ­ரர்­க­ளுக்­கான நினை­வுப்­பா­ட­லு­டன், ஈகச்­சு­ட­ரேற்­றல் நடை­பெ­றும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு