துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் வீட்டில் இருந்தவா்களை தாக்கிவிட்டு கொள்ளை.. கிளிநொச்சி நகாில் பதற்றம்.

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் வீட்டில் இருந்தவா்களை தாக்கிவிட்டு கொள்ளை.. கிளிநொச்சி நகாில் பதற்றம்.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வீடொன்றில் ஆயுத முனையிலான திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. அடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்தியும், தம்மை தாக்கியும் நகை மற்றும் ஆவணங்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது தாலி, சங்கிலி மற்றும் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், திருட வந்தவர்கள் தம்மை அடையாளம் தெரியாதவாறு முகத்தினை மறைத்திருந்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டினை உடைத்தும், கைத்துப்பாக்கியையும் அவர்கள் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, குறித்த பகுதியில் போலி துப்பாக்கி ஒன்றும் கைவிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தம்மை குறித்த நபர்கள் தாக்கியதாக தெரிவித்து மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு