என்னடா இது கந்தனுக்கு வந்த சோதனை? நல்லூரில் அடாவடியில் பௌத்த பிக்கு!

ஆசிரியர் - Admin
என்னடா இது கந்தனுக்கு வந்த சோதனை? நல்லூரில் அடாவடியில் பௌத்த பிக்கு!

யாழ்ப்பாணத்தில் நாகவிகாராதிபதியின் இறுதிக்கிரியைக்கு வந்திருந்த புத்த பிக்குக்கள் எதிர்பார்க்கப்பட்டது போன்று குழப்பங்களினில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலயத்திற்கு சென்றிருந்த பிக்கு ஒருவர் அடாவடிகளில் ஈட்டுப்பட்டுள்ளார்.

நல்லூர் கந்தசரி கோவிலின் மதகுருமார்கள் மற்றும் கோயில் பணியாளர்களின் எச்சரிக்கையினை மீறி அனுமதி மறுக்கபட்ட பகுதிக்குள் சென்றதுடன் அங்கிருந்த கொடித்தம்பத்தை சுற்றியுள்ள கம்பித்தடுப்பினை ஊடறுத்து உள்ளே நுழைந்துமுள்ளார்.

அத்துடன் வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு இடையுறாக நடுவில் நின்று வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் தான் மதகுரு என்றும் எங்கும் செல்ல தனக்கு உரிமை உண்டு என்று வாதிட்டுள்ளார்.

பொதுபல சேனாவினை சேர்ந்த ஒரு தொகுதி பிக்குகள் தற்போது யாழில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

என்னடா இது கந்தனுக்கு வந்த சோதனை? கடைசியில் கந்தனையும் உரிமை கோரி கதிர்காமம் ஆக்கப்போகிறார்களா?

பௌத்தத்திற்கு முன்னுரிமை என்றார்கள் பௌத்தர்களுக்கு நம்ம கோயிலிலும் முன்னுரிமை அளிக்கவேண்டுமோ? அண்ணன் சுமந்திரனிடம் கேட்டு சொல்லுங்களடாப்பா?

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு