மஹிந்தவுக்கு ஆதரவான ஊா்வலத்திற்காக அரச அதிகாாிகளை அழைத்துக் கொண்டு தானும் கொழும்பு சென்றாா் ஆளுநா்..

ஆசிரியர் - Editor I
மஹிந்தவுக்கு ஆதரவான ஊா்வலத்திற்காக அரச அதிகாாிகளை அழைத்துக் கொண்டு தானும் கொழும்பு சென்றாா் ஆளுநா்..

கொழும்பில் நேற்று மகிந்தவிற்கு ஆதரவாக இடம்பெறும் மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கில் இருந்து பல அரச அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் கொழும்பில் கூடும் மகிந்தவிற்குச் சார்பான ஊர்வலத்தில் 5 லட்சம் மக்களை திரட்ட எதிர்பார்க்கும் நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் வடக்கில் இன்றும் நாளையும் 

வடக்கில் பல திட்டங்களிற்கு நேரம் ஒதுக்கியிருந்தார். திடீரென கொழும்பிற்கு அழைக்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாணத்தில் திட்டமிடப்பட்ட பணிகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டது.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள திணைக்களங்கள் அமைச்சுக்களில் இருந்தும் இன்றைய கொழும்பு ஆர்ப்பாட்டத்திற்காக பலரும் சென்றுள்ளனர்.

இருப்பினும் இவ்வாறு அதிகமான உத்தியோகத்தர்கள்  வடக்கில் இருந்து  ஆளுநரின் அனுமதியின் பிரகாரம் செல்கின்றனர்.

இதே  நேரம் இன்றைய தினம் வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு