மீசாலையில் ரயில் மோதி ஒருவர் பலி!
சாலையில் ரயில் மோதி ஒருவர் உயிரழந்துள்ளார். கிளிநொச்சி -திருவையாறைச் சேர்ந்த 38 வயதான தெய்வேந்திரம் ஞானயூகன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த கடுகதி ரயிலே மோதியுள்ளது.
பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார்சைக்கிளில் கடக்க முற்பட்டபோது விபத்து நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.