பாசையூர் கடற் பகுதியில் வெளிச்சவீடு- இடிதாங்கியை அமைத்து தர கோரிக்கை!
பாசையூர் கடற் பகுதியில் இடி தாங்கி, வெளிச்சவீடு அமைத்துத் தர வேண்டும் என யாழ் மாவட்டக் கடற்றொழிலாளர் சம்மேளனம் கடற்றொழில் அமைச்சருக்கு நேற்று மனு அனுப்பியது.அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது;
யாழ் மாவட்ட மீனவர்களில் சிலர் தற்போது ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். தற்போதுள்ள கடற்றொழில் திணைக்களத் தின் சுற்றுநிருபத்தின்படி 45 அடிக்கு குறைவான படகுகளை உற்பத்தி செய்ய முடியாதுள்ளது. எனவே போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்கள் கோருவது போல 36 அடிக்கு மேற்பட்ட படகுகள் உற்பத்தி செய்வதற்கு சிறப்பு அனுமதி வழங்கவும்.
2018 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 55 நீளமான படகுகளுக்கு 50 வீத மானியம் வழங்கப்பட்டது. எனவே மீனவர்களுக்கு 36 அடிக்கு மேற்பட்ட படகுகளுக்கு இந்த மானிய உதவி வழங்க வேண்டும் குருநகர் மற்றும் தீவுப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பாரம்பரியமாக சுழியோடுவதன் மூலமாக கடலட்டை, சங்கு என்பனவற்றை பிடித்துவரு கின்றனர்.
தற்போது வெளிமாவட்ட மீனவர்கள் செயற்கை வாயுவுடன் சுழியோடுவதன் மூலமாக இந்த வளங்கள் மிக விரைவாக அழிவடைய வாய்ப்பு உள்ளது. யாழ் கடலேரி பகுதியிலும் மற்றும் கிளிநொச்சி மாவத்திலும் செயற்கை வாயுவைப் பயன்படுத்தி சழியோடுவதை முற்றாக நிறுத்த வேண்டும்எனவும் இந்தப் பகுதியில் பாரம்பரியமாக சுழியோடு பவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
தொழிலில் ஈடுபடுபவர்கள் தடிகளைப் பெறுவதற்கு மிகுந்த சிரமப்படு கின்றார்கள். அவர்கள் அவற்றை பெறுவதற்கு வன இலாகா திணைக்களம் மூலமாக இலகு நடைமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும்.
போர் காரணமாக பல மீன்பிடி கலங்கள் பதிவு செய்யப்படாமல் காணப்படுகின்றன. அவற்றைப் பதிவு செய்வதற்கு உரிய ஒழுங்குகளை செய்து தரவேண்டும்.
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து வழங்கப்பட்ட எரிபொருள் மானிய திட்டத்தின் கீழான வலை வளங்களில் 2013 ஆம் ஆண்டு எரிபொருள் மானியத்தை பெற்றவர்களுக்கு வலை வழங்கப்படவில்லை. போர் காரணமாக படகு பதிவதில் தாமதம் ஏற்பட்டது.
எரிபொருள் மானியம் பதிந்தவர்களுக்கு வலை வழங்க வேண்டும். பாசையூரை அண்டிய கடல் நீர்ஏரியில் அமைந்திருந்த வெளிச்சவீடும் அதனோடு அமைந்திருந்த இடிதாங்கியும் போர் காரணமாக அழிவடைந்தது.
இதனால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன மிக விரைவாக வெளிச்ச வீட்டையும் அதனோடு அமைந்திருந்த இடிதாங்கியையும் அமைத்துத் தர வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடனும் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும் ஈடுபடும் எம்முடைய சம்மேளனத்துக்கு ஓர் அலுவலகம் இல்லாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது