தேச விடுதலைக்காய் தம்மை தந்தவர்களை மறந்து மஹிந்தவுக்கு ஆதரவா..?

ஆசிரியர் - Editor I
தேச விடுதலைக்காய் தம்மை தந்தவர்களை மறந்து மஹிந்தவுக்கு ஆதரவா..?

 தமிழ் மக்களுடைய அபிலாசைகளை அடியோடு மறுத்து ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் மகிந்தராஜபக்சாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

சாவகச்சேரி நகரில் உள்ள கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற  நூல் வெளியீட்டு விழாவில்  கலந்து கொண்டு  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்   அங்கு மேலும் உரையாற்றுகையில் , 

இந்த மண்ணிலே நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த அந்த மான மாவீரர்களிற்கும்  அவர்களின் தியாகதிற்கு  நாம் ஒருபோதும் துரோகம் செய்யமாட்டோம் 

தமிழர்கள் இந்த மண்ணிலே ஓர் இலட்சியம் நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் வேங்கைகளை விதை ஆக்கியவர்கள் நாங்கள் 

இலங்கையில் இருக்கின்ற எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்ற சிந்தனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ரணில் விக்கிரமசிங்க ஆனாலும் சரி மஹிந்த ராஜபக்ஷ ஆனாலும் சரி 

எமது இனத்தை எந்த வகையிலும் அடக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

எமது கட்சியினுடைய தலைவர் இரா சம்பந்தன்  மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று எங்கள் உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை எழுத்து மூலம்  தந்தால் எமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலாம் என தெரிவித்த போதிலும் அதனை மறுத்து விட்டார்.

ஆட்சிக்கு வர துடிக்கும் எந்த ஒரு ஆட்சியாளர்களும் எமக்கான அதிகாரத்தை தருவதற்கு தயாராக இல்லை. தந்தை செல்வா அவர்களால் அறவழியில் போராட்டம் முன்னெடுக்கின்ற போது இறுதியில்  தந்தை செல்வா சொன்னார் 

தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னபோது எமது தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு வயது 16 தந்தை செல்வாவிற்கு தெரியாது பிரபாகரன் 30 வருடங்களாக தமிழர்களுடைய போராட்டத்தை 

கொண்டு செல்வார் ஆனாலும் போராட்டம் மௌனித்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களுடைய பயணத்தை கொண்டு செல்கிறது அதனை அடைவதற்காக முயற்சி செய்கிறது

நாம் வாழவேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்னுயிர்களை ஈகம் செய்த அந்த மாவீரர்களுக்கு ஒருபோதும் நாம் துரோகம் இழைக்க மாட்டோம்

ஆனால் தமிழர்களுடைய போராட்ட வரலாற்றிலே துரோகங்கள் ஒன்றும் புதியவையல்ல  ஆனாலும் தமிழர்கள் மொழி ரீதியாகதமிழ் மக்களுடைய அபிலாசைகளை அடியோடு மறுக்கும், 

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் மகிந்த ராஜபக்சாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை இனரீதியாகவும்  அடையாள ரீதியாகவும் இன்றும் நாம்   அடக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்  என்கின்ற உண்மையை எவரும் மறந்துவிட முடியாது.

மானமாவீரர்களை நினைவுகூறும் இந்த கார்த்திகை மாதத்தில் கூட துரோகத்தை என்னுகின்றனர் என்பது சகிக்க முடியாத மனவேதனைக்குரிய விடயமாகவே உள்ளது. என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு