அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிய நபர் கைது!
அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் டிப்பர் வாகனத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பளைபொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிகின்றன.
பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மக்கேணி பகுதியில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் சாரதிக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது