வடமாகாணத்தில் 1 மாதத்தில் 4722 வெடி பொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் 1 மாதத்தில் 4722 வெடி பொருட்கள் மீட்பு..

வடக்கில் மூன்று மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலத்தில் 4 ஆயிரத்து 722 வெடிபொருட்கள் தமது நிறவனத்தால் அகற்றப்பட்டு உள்ளதாக ஹலோரெஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 16 வருட காலமாக வெடி பொருட்களை அகற்றும் பணியில் குறித்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது வடக்கில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இருந்து ஒரு மாதத்தில் ஆயிரத்து 498 மிதிவெடிகள், ஒரு வாகன எதிர்ப்பு மிதிவெடி , 209 வெடிக்காத வெடி பொருட்கள் , 14 ஆபத்து குறைந்த வெடி பொருட்கள் , மூவாயிரம் துப்பாக்கி ரவைகள் என்பவற்றை தாம் மீட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வெடி பொருட்களை அகற்ற மனித வலுவையும், இயந்திர வலுவையும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு