கொடிகாமம்-கெற்பெலியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..
கொடிகாமம் கெற்பெலிப் பகுதியில் பலகாலமாக சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குழுவை மடக்கிப் பிடித்தனர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர்.
இன்று பி.பகல் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
இதன் போது 200 லீடர் கோடா மற்றும் 28 போத்தல் ஸ்பிறிற் என்பனவற்றை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.