தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி பருத்துறையில் போராட்டம்..
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனகோரி யாழ்ப்பாணம் நெல்லியடியில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென யாழ்ப்பாணத்தி ல் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கைதிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் நெல்லியடியில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.