அலாி மாளிகையிலிருந்து 4 மணிக்கு முன் வெளியேற வேண்டும்.. ரணிலுக்கு காலக்கெடு விதித்த அரசு.
அலாி மாளிகையை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேறாவிட்டால் உள்ளே புகுந்து ரணிலை வெளியேற்றுவோம் என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரசன்வ கூறியுள்ளாா்.
அதேவேளை இன்று மாலை 4 மணிக்குள் அலாி மாளிகையில் இருந்து வெளியேறுமாறு ரணில் விக்கிரம சிங்கவுக்கு அர சாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது.
“ஜனாதிபதியால் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்ட பின்னர், பிரதமர் பதவியில் இருக்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்த உரிமையும் இல்லை.
ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளியேற மறுத்தால், நாங்கள் மக்களின் ஆதரவுடன், அலரிமாளிகையில் இருந்து அவரை வெளியேற்றுவோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் ஏற்கனவே கொழும்பில் ஒன்று கூடியுள்ளனர்
என்றும், ரணில் விக்கிரமசிங்க கௌரவமான முறையில் வெளியேறாவிடின், அவர்கள் அலரி மாளிகைக்குள் நுழைவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையிலேயே இன்று மாலை 4 மணிக்கு முன்னா் அலாி மாளிகையிலிருந்து வெளியேறவேண்டும் என அரசாங்கம் கூறியுள்ளா்.