கடமையை சரியாக செய்யாத 8 பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்..

ஆசிரியர் - Editor I
கடமையை சரியாக செய்யாத 8 பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்..

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிசாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கபட்டு உள்ளது. 

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பில் உரிய முறைகளில் விசாரணைகளை முன்னெடுக்க வில்லை எனவும் , 

அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் பல விசாரணைகள் நீண்ட காலமாக முடிவின்றி இருபதாகவும் தெரிவித்தே அப்பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிசாரும் 

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரெஷான் பெனர்ண்டோவின் உத்தரவில் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 

அதேவேளை கடந்த மாதம் யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய பத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிட்ட தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு