ஆக்கபூா்வமாக ஒன்றும் பேசாமல், ஒன்றும் செய்யாமல் நிறைவடையும் காணி விடுவிப்பு தொடா்பான கூட்டங்கள்..

ஆசிரியர் - Editor I
ஆக்கபூா்வமாக ஒன்றும் பேசாமல், ஒன்றும் செய்யாமல் நிறைவடையும் காணி விடுவிப்பு தொடா்பான கூட்டங்கள்..

கடந்த 03.10.2018 இல் நடைபெற்ற வடக்கு மாகாணத்திற்கானஅபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி அவர்களால் வடக்குமாகாணத்தில் நிலவும் பொதுமக்களின் காணிப்பிரச்சனைகளான இராணுவத்தின் வசமுள்ள காணிகள் , 

வனவளத்திணைக்களம் கையகப்படுத்தி உள்ள காணிகள்,தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் , 

வனஜீவராசிகள் திணைக்களம் இடைநிறுத்தி உள்ள காணிகள் போன்றவைதொடர்பான பிரச்சனைகள் வட மாகாண ஆளுநர் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் அலுவலர்கள் ஆகியோரால் 

கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று  முல்லைத்தீவு மாவட்டச்செயலத்தில் காலை 9.30 மணிக்கு ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. 

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவமாவை சேனாதிராஜா, கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ சிவசக்திஆனந்தன், கௌரவ சாந்தி சிறீஸ்கந்தராசா, கௌரவ சு. சிவமோகன் ஆகியோர் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார் அலுவலர்கள் ஆகியோர் சமூகத்தில் நடைபெற்றது.

ஆரம்பத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தி உள்ள காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டபோதும் கேப்பாபிலவு பாடசாலைக்காணி உட்படஎந்தக்காணியையும் விடுவிப்பதற்கு இராணுவம் இணங்கவில்லை. 

இதனால் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் காணிகளை விடுவிப்பதுதொடர்பில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இதைத்தொடர்ந்து மிக முக்கிய காணிப்பிரச்சனைகளான மகாவலி தொடர்பானபிரச்சனைகள், தொல்பொருளியல் தொடர்பான பிரச்சனைகள், வனவளத்திணைக்கள காணிகள், 

வனஜீவராசிகள் தொடர்பான காணிகள் என்பவைதொடர்பாக ஆராயப்படாமலே ஆளுநர் அவர்களால் கலந்துரையாடல் முடிவுறுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு