கஞ்சா பீடி புகைத்த 3 பேர் கைது..
கஞ்சா பீடி புகைத்த மூவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
யாழ்.நந்தாவில் பகுதியில் நேற்றைய தினம் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் விசேட
அதிரடிப்படையினர் ஈடுபட்டு இருந்த வேளை அப்பகுதியில் கஞ்சா பீடி புகைத்தவாறு இருந்த மூவரை கைது செய்துள்னர்.
கைது செய்யப்பட்டவர்கள் , கொக்குவில் , மல்லாகம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , கைது செய்யபட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிசாரிடம்
ஒப்படைத்து உள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.