தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனு ஆட்சேபனைக்கு உட்படுத்தப்பட்டது -

ஆசிரியர் - Editor II
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனு ஆட்சேபனைக்கு உட்படுத்தப்பட்டது -

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் திருக்கோவில் பிரதேசசபைக்கு போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வேட்புமனு அதே பிரதேசசபையில் போட்டியிடுகின்ற மற்ற அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்களால் ஆட்சேபனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் குறித்த பிரதேசசபைக்கு போட்டியிட பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த தலைமை வேட்பாளர் வி.புவிதராஜன், சக வேட்பாளர் அ.கலாநேசன் ஆகியோர் அவர்கள் கடமையாற்றுகின்ற அரசாங்க திணைக்களங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் அனுமதி பெற்று இருப்பதாக வேட்புமனுவில் ஆவணப்படுத்தி இருக்கவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இருவரும் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்து விட்டனர் என்பதை அம்பாறை மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் அலுவலகம் ஆட்சேபனையை ஏற்றுக் கொண்டு பிரகடனப்படுத்தியுள்ளது.

சம்மாந்துறை பிரதேசசபை, ஆலையடிவேம்பு பிரதேசசபை ஆகியவற்றிற்கு தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவரால் சமர்ப்பிக்கப்பட்டிராத நிலையில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிடப்படுகின்றது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு