பதவிக்காலம் முடிந்த பின்னும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டுமாம்..

தமது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் , எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்து உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. அந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டு உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ,
எதிர்க்கட்சி உறுப்பினர் சி. தவராசா உட்பட மூவர் தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என விண்ணப்பித்து உள்ளனர்.