11 கிலோ "மாவா" போதை பாக்குடன் குடும்பஸ்த்தர் கைது..
யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி யில் 11 கிலோ மாவா போதை பாக்குடன் குடும்பஸ்த் தர் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செ ய்துள்ளனர்.
வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதனுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக தெல்லிப்பழைப் பிரதேசத்தில் 11 கிலோ மாவாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உபபொலிஸ் பரிசோதகர் உதயாந் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள், முச்சக்கர வண்டியில் மாவாவுடன் சென்றதாகத் தெரிவித்து 41 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அவர் காங்கேசன்துறைப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.