வடமாகாண விவசாய அமைச்சினால் 100 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி..

ஆசிரியர் - Editor I
வடமாகாண விவசாய அமைச்சினால் 100 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி..

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் யாழ்மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 100 க்கும் அதிகமான விவசாயப் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கப்பட்டது. 

திருநெல்வேலி விவசாயப்பண்ணையில் இன்று காலை மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான விவசாய உபகரணங்களை வழங்கி வைத்தார். 

நீர் இறைக்கும் இயந்திரங்கள், மின்மோட்டர், குரங்குகளை கட்டுப்படுத்துவதற்கான துப்பாக்கிகள், அசோலா வளர்ப்பிற்கான பாரிய தொட்டிகள்,  விவசாய உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகள் என சுமார் 10 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு