யாழ்.காங்கேசந்துறை வீதியில் கிடந்த துப்பாக்கி தோட்டாவால் அப்பகுதியில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசந்துறை வீதியில் கிடந்த துப்பாக்கி தோட்டாவால் அப்பகுதியில் பரபரப்பு..

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் பகல்வேளையில் ஓர் வர்த்தக நிலையத்திற்கு நேரே நடுவீதியில் புதிய துப்பாக்கிச் ரவை  ஒன்று காணப்பட்டதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சுன்னாகம் சந்தியை அண்டிய பகுதியில் காலை 9.30 மணியளவில் பிரதான சாலையில் குறித்த துப்பாக்கி ரவை  காணப்பட்டது. 

இவ்வாறு காணப்பட்ட துப்பாக்கி ரவையானது மிகவும் புதிதாக எந்தவிதமான சேதாரங்களும் இன்றியே காணப்பட்டமையினால் அதனை எடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை.

இந்த நிலையில் பொலிசாருக்கு தகவல் வழங்க முற்பட்ட சமயம் வேறு பணி நிமித்தம் குறித்த வீதியால் பயணித்த சுன்னாகம் பொலிசாரை வழிமறித்த சிலர் 

துப்பாக்கி ரவை தொடர்பில் விபரத்தினைத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த ரவையினை பார்வையிட்ட பொலிசார் அது ஆபத்தானது என இனம் கண்டுகொண்டனர் .

இதன் அடிப்படையில் குறித்த துப்பாக்கி ரவையினை மீட்ட பொலிசார் அப் பகுதிகளில் பணி நிமித்தம் நடமாடிய இராணுவத்தினர் அல்லது கடற்படையினரின் துப்பாக்கியில் இருந்து தவறுதலாக விழுந்துருக்க கூடும் எனத் தெரிவித்து ரவையை கொண்டு சென்றனர்.

இதேநேரம் குறித்த துப்பாக்கி ரவையினை அப்பகுதியில் இனம் காணுவதற்கு சில நிமிடங்களின் முன்பு அப் பகுதியில் கடற்படையினர் சிலர் சீருடையில் நடமாடியதாக அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு