கஞ்சா பொதி என கூறி மண்,மரத்தூள் அடங்கிய பொதியை விற்பனை செய்த கில்லாடி..
கஞ்சா என கூறி மண், மரத்தூள் அடங்கிய பொதியி னை விற்பனை செய்த பலே கில்லாடி குறித்த தகவ ல்கள் வெளியாகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த ஆர் சிறீவர்தனவின் கீழ், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இயங்கி வருகின்றது.
பொறுப்பதிகாரி சதுரங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் திமித்து தலமையில் இயங்கும் இந்தக் குழுவினருக்கு, பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். மிகிந்தலப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை இரண்டு பொதிகளுடன் கைது செய்தனர்.
அவற்றைக் கஞ்சாப் பொதி என்ற சந்தேகத்திலேயே பொலிஸார் மீட்டனர். அந்தப் பொதியைத் திறந்து பார்த்தபோது, மண் மற்றும் மரத்தூள் காணப்பட்டுள்ளது.
இரண்டு பொதிகளையும் கஞ்சா என்று தெரிவித்து, ஒரு லட்சம் ரூபாவுக்கு கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் விற்பனை செய்துள்ளதாக, ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.