அரசியலில் இருப்பதா..? இல்லையா..? 24ம் திகதி முடிவை அறிவிக்கவுள்ள சீ.வி..

வட மாகாணசபையின் ஆட்சிக் காலம் 24ம் திகதி ந ள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் 24ம் திகதி காலை முதலமைச்சர் தனது எதிர்கால திட்டம் குறி த்து மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9.30மணிக்கு நல்லூர் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை ஊடக அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் உள்ளதாவது-
தமிழ் மக்களின் தற்போதைய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய கால கட்டத்திலுள்ளது.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், அதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு உரையாற்றவுள்ளார். தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.
இந்த ஒன்று கூடலுக்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பொதுமக்கள், பொது அமைப்புக்கள், தொழில் சங்கங்கள் கல்விச் சமுகத்தினர் மற்றும் இளையோர் கலந்துகொள்ள வேண்டும்.- என்றுள்ளது.