மாவையின் மகனும் தேர்தல் களத்தில்

ஆசிரியர் - Editor II
மாவையின் மகனும் தேர்தல் களத்தில்

உள்ளூராட்சி தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் புதல்வன் களமிறங்க உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் போட்டியிடவுள்ளார். கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து கல்வி கற்று வந்த கலையமுதன் தற்போது நாடு திரும்பியுள்ளார்.

வலி.வடக்கு பிரதேச சபையில் போட்டியிடுகின்றார். வலி.வடக்கு பிரதேச சபையில் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் முன்னாள் உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோரும் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிருகின்றமை உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளைய தினம் மதியம் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் முடிவடைய உள்ள நிலையில் இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாழில்.வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.<

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு