தலைமையை துறக்க தயாராகும் முக்கிய அரசியல் புள்ளி!

ஆசிரியர் - Editor II
தலைமையை துறக்க தயாராகும் முக்கிய அரசியல் புள்ளி!

எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் நான் தலைமையை விட்டுக் கொடுக்க தயார் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள், எனவே அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் நான் தலைமையை விட்டுக்கொடுக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறை தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும் என்றும் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு