உழவு இயந்திரத்தில் பொருத்திய காற்றாடியில் சிக்கி பெண் மரணம்!

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரத்தில் பொருத்திய காற்றாடியில் சிக்கி பெண் மரணம்!

வெங்காயம் உலர்த்துவதற்காக உழவு இயந்திரத்தில் பொருத்தியிருந்த காற்றாடியில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். புத்தூர் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதில் அறிவொறி வீதி, புத்தூர் பகுதியைச் சேர்ந்த இரத்தினம் தவமலர் (வயது 58) என்ற பெண்ணே, உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக விடாது பெய்த மழையால், வீட்டில் கட்டியிருந்த வெங்காயப் பிடிகள் மழையில் நனைந்திருந்தன. அதனால் உழவு இயந்திரத்தை இயக்கி, அதில் காற்றாடியை இணைத்து, வெங்காயத்தை உலர வைத்துள்ளனர். 

குறித்த பெண், ஆடைகளை உலர்த்துவதற்காக காற்றாடிக்கு அருகில், ஈரமான ஆடைகளை எடுத்து சென்றுள்ளார். காற்றாடியில் இருந்த வந்த காற்று, அவரை உள் இழுத்துள்ளதுடன், அணிந்திருந்த சேலையும் சக்கரத்தில் சிக்குண்டுள்ளது.

இதனால், காற்றாடியின் பிளேட்டுக்குள் சிக்குண்டதில் பாரிய வெட்டுக்காயங்களுக்கும் உள்ளாகியுள்ளான குறித்த பெண், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது, இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு