யாழில் திடீர் தீயனர்த்தம்
யாழ். பருத்தித்துறைப் பகுதியில் பலசரக்குக் கடையொன்று திடீரென தீப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அனர்த்தத்தின் காரணமாக குறித்த கடையின் பெருமளவான பகுதி தீயிற்கு இரையாகியுள்ளது.
இந்த நிலையில், குறித்த கடையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினரும், இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், விபத்து நேர்ந்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என கூறப்படுகிறது.