யாழில் முகம் கழுவச் சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
யாழில் முகம் கழுவச் சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ். நாவலி பகுதியில் முகம் கழுவச் சென்ற வயோதிபர் ஒருவர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகம் கழுவச் சென்ற வயோதிபரை காணவில்லை என்று உறவினர்கள் தேடிய போது, அவர் கிணற்றில் விழுந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு