வடமராட்சி வல்லைப் பாலத்துக்குள் பாய்ந்தது பிக்கப் வாகனம்!! நடந்தது என்ன??

ஆசிரியர் - Editor II
வடமராட்சி வல்லைப் பாலத்துக்குள் பாய்ந்தது பிக்கப் வாகனம்!! நடந்தது என்ன??

வடமராட்சி வல்லைப் பாலத்துக்குள் பிக்கப் ரக வாகனம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

இச் சம்பவம் சற்று முன்னா் இடம்பெற்றது.

வேககட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாலத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாக தொிவிக்கப்பட்டது.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகத்தில் இந்த பிக்கப் ரக வாகனம்பயணித்துக்கொண்டிருந்ததாகவும் இதன்போது பாலத்தில் வைத்து தீடிரென நிறுத்த முற்பட்ட வேளையில் பாலத்திற்குள் பாய்ந்து விபத்திற்கு உள்ளாகியதாகவும் சம்பவ இடத்தில் நின்ற எமது செய்தியாளா் தெரிவித்தாா்.

இதேவேளை விபத்திற்கு உள்ளான பிக்கப் ரக வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்த நிலையில் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் விபத்திற்கு உள்ளான வாகனத்தை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு