கிளிநொச்சியில் தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்பட்டதா? - விசேட குழு ஆராய்வு

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில் தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்பட்டதா? - விசேட குழு ஆராய்வு

கிளிநொச்சியில் தொல்லியல் சின்னங்கள் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் செய்தி பரப்பட்ட நிலையில் , நேற்று பகல் கிளிநொச்சிக்கு வந்த விசேட தொல்லியல் குழுவினர், சிதைக்கப்பட்டதாக கூறப்படும் தொல்லியல் சின்னங்கள் தொடர்பில் ஆய்வு செய்தனர்.

வவுனியா தொல்லியல் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 16.09.2018 அன்று கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த சிறு வீதி வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கையில் தொல்லியல் மரபு சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன.

குறித்த பகுதியில் 2010ஆம் ஆண்டளவில் குறித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமாதானத்திற்கான நினைவு தூபியின் மேலதிக அழகுபடுத்தலுக்காக புராதன கற்றகள் போன்று வடிவமைக்கப்பட்ட கற்களால் வீதி சிறு வளைகு நான்கு பக்கங்களிலும் அமைக்கப்பட்டது.

குறித்த வளைவுகளில் நகர திட்டமிடல் அதிகார சபையினால் பூங்கா அமைப்பதற்காக ஒரு பகுதியிலும், மற்றய பகுதியில் கிளிநாச்சி பொது சந்தை அமைப்பதற்காகவும் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி மற்றய பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுவந்த பகுதியில் வடிகாண் ஒன்றை அமைப்பதற்கு அகற்றப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உண்மைநிலையை ஆராய குறித்த பகுதிக்கு விசேட குழு வருகை தந்திருந்தது. அவ்விடத்தில் குறிப்பிட்ட தொல்பொருள் சிதைக்கப்பட்டதாக கூறப்படும் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு