முதலமைச்சரின் கருத்தை மறுத்தார் சி.சிறீதரன்.

ஆசிரியர் - Editor I
முதலமைச்சரின் கருத்தை மறுத்தார் சி.சிறீதரன்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார். அவர் தனி நபராக போட்டியிட்டிருக்க வில்லை. எனவே மக்கள் தாம் ஏற்க்கும் கட்சிசார்ந்தவர்களையே தேர்வு செ ய்யவேண்டும். தனிநபர்களை அல்ல. என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதர ன் கூறியிருக்கின்றார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் நிலமைகள் தொடர்பாக இன்று காலை நாடாளு மன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது நேற்று முன்தினம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலா ளர்களை சந்தித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மக்கள் கட்சிகளை பா ர்க்காமல் தமக்கு சிற

ந்த சேவையாற்ற கூடிய தனிநபர்களை தேர்வு செய்யவேண்டும் என கூறியி ருந்தார். இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நi டபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை சாதாரணமாக பார்க்க இயலாது மக்கள் தொடர்சியாக

தேர்தல்களில் வழங்கிவரும் ஆணையை வலுப்படுத்தும் தேர்தலாக இந்த N தர்தல் அமையும். இதில் கட்சிகளை பார்க்காமல் ஆட்களை பார்த்து வாக்களி யுங்கள் என கூறப்படும் கருத்துக்கள் கருத்துக்களே அல்ல. மக்கள் கட்சிக ள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே ஆட்களுக்கு வாக்களிக்கிறார்கள். குறிப்பாக முதலமைச்ச

ர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாக தேர்தலில் போட் டியிட்டார். தனிநபராக தேர்தலில் போட்டியிடவில்லை. மாகாணசபையை மத்தி ய அரசாங்கம் சுயமாக இயக்க அனுமதிக்கவில்லை. என கடந்த சில தினங்க ளுக்கு முன்னரும் கூட முதலமைச்சர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் ஊடாக பார்

த்தேன். அவ்வாறிருக்கையில் மாகாணசபைகளின் கீழ் இயங்கும் குட்டி அரசா ங்கமான உள்ளூராட்சி சபைகளில் தனி நபர்கள் மக்களுக்கு என்ன சேவை யை செய்ய முடியும். ஒரு தனிநபர் ஒரு வீதியை போட இயலுமா? தண்ணீரை பெற்று கொடுக்க இயலுமா? எனவே இவ்வாறான கருத்துக்களில் மக்கள் க ருத்தூன்ற கூடாது. ம

க்கள் தாம் ஏற்றுகொள்ளும் கட்சிகளுக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் தங் கள் ஆதரவை வழங்கவேண்டும் என கூறினார். மேலும் யாழ்.மாநகரசபை N மயர் வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கேட்டபோது கட்சிரீதியாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக நான் அறியவில்லை. இதற்கிi டயில் சொலமன் சிறில்

பத்திரிகையாளர் வித்தியாதரன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ஆ னோல்ட், ஜெயசேகரம் போன்றவர்களின் பெயர்கள் பேசப்படுகின்றது. இவர் களில் யாரை மேயர் வேட்பாளராக போடுவது என்பது தொடர்பான உத்தியே hகபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக இல்லை. இந்நிலையில் யாரை மே யர் வேட்பாளராக போ

ட்டாலும் வேறு வேலைகள் இல்லாமல் 100 வீதம் மக்களுக்கு சேவையாற்ற கூடிய இனத்தின் விடியலை நோக்கி உளமார நகர கூடிய ஒருவரை மக்கள் தேர்வு செய்யவேண்டும். அதனோடு யாழ்.மாநகரம் என்பது தமிழர்களின் அ டையாளம். வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்கள் யாழ்.மாநகரை பார்கின் றபோது அவர்கள் யாழ்.

மாவட்டத்தின் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட அடையாளங்களை காண்கி றார்கள். அதனை பாதுகாக்கும் தன்மை கொண்டவரை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு