யாழில் கேபிள் லைன்கள் வெட்டப்படுவதாக முறைப்பாடு -
யாழில் இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் கேபிள் லைன்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று CAX - 9991 என்ற இலக்கமுடைய கறுப்பு நிற காரில் வந்தவர்களினாலேயே கேபிள் லைன்கள் அறுக்கப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த கார் யாருடையது எனவும் கேபிள் லைன்கள் அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது