கடிதம் மேல் கடிதம் அனுப்பும் தமிழரசு வேட்பாளர்கள்!

ஆசிரியர் - Admin
கடிதம் மேல் கடிதம் அனுப்பும் தமிழரசு வேட்பாளர்கள்!

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்கள் தாம் தேர்தலில் போட்டியிடாது விலகுவதாக ஊடகங்களில் வந்த செய்தி உண்மைக்கு புறம்பானதென பல்டியடித்துள்ளனர்.

எனினும் ஆறாவது மற்றும் ஏழாவது வேட்பாளர் முடிவெதனையும் அறிவிக்காது திரிசங்கு நிலையிலுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் தம்மை அருந்தவபாலன் ஏமாற்றிவிட்டதாகவும் அந்தர்பல்டியடித்துள்ளனர்.


நேற்றைய தினம் அவர்களால் தமிழழரசுக்கட்சி தலைவர் மாவைசேனாதிராசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு மேலதிகமாக தற்போது மற்றொரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தை வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தயாரித்ததாக சொல்லப்படுகின்றது.

முன்னதாக அருந்தவபாலன் தன்னால் பெயர் பிரேரிக்கப்பட்டவர்களுள் ஏமாற்றப்பட்டவர்களை அழைத்து ஒரு கடிதத்தை தயாரித்து மாவைக்கு அனுப்பியிருந்தார்.

இதற்கு போட்டியாக அவ்வாறு கடிதம் அனுப்பிய ஜவரை வளைத்துப்போட்ட சயந்தன் 25 இலட்சம் பணம் மற்றும் பதவிகள் வழங்கப்படுவதாக உறுதி மொழிகளை பெற்று கடிதங்களை தனது பங்கிற்கும் பெற்று மாவைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு