இளம் சமூகத்தின் வரவிற்காக காத்திருக்கின்றது பேரவை! : வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

ஆசிரியர் - Admin
இளம் சமூகத்தின் வரவிற்காக காத்திருக்கின்றது பேரவை! : வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

தற்போதைய அரசியல் குழப்பங்களால் நேர்மையானவர்கள் மற்றும் இளம் சமூகத்தினர் ஒதுங்கிப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தின் ஜந்தாவது ஆண்டைய பயணத்திற்கு தனது வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் நேரடியாக அங்கு பயணம் செய்திருந்த முதலமைச்சர் தனது ஆசியினை வழங்கியிருந்தார்.

பின்னர் ஊடகவியலாளர்களிடையே எழுப்பப்பட்ட கேள்விகளிற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில் அவர்களது ஆதரவை பெற்று எவ்வாறு ஆரோக்கியமான அரசியல் சூழலை ஏற்படுத்துவது தான் தமிழ் மக்கள் பேரவையின் நோக்கமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் உள்ளுராட்சி தேர்தலில் எந்த கட்சியென்பதற்கப்பால் நேர்மையான மக்களிற்கு சேவையாற்றக்கூடியவர்களிற்கே வாக்களிக்கவேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு