பிரம்மபுத்திரா மற்றும் சாங் போ நதிகளில் வெள்ளப்பெருக்கு இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!

ஆசிரியர் - Admin
பிரம்மபுத்திரா மற்றும் சாங் போ நதிகளில் வெள்ளப்பெருக்கு இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!

பிரம்மபுத்திரா மற்றும் சாங் போ நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் பெரும் கனமழை வெள்ள பேரிடர் ஏற்பட்டு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

குறப்பாக சீனா ஒட்டியுள்ள சாங் போ நதியில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா வெள்ளப் பேரிடரில் இருந்து பாதுகாக்கும் வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே, அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும், சாங்போ மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் பாயும் கரையோர கிராமமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு