மக்களிடம் தர்ம அடி வாங்கிய வாள்வெட்டுக் குழு பொலிஸாரிடம் சிக்கினார்கள் -

ஆசிரியர் - Editor II
மக்களிடம் தர்ம அடி வாங்கிய வாள்வெட்டுக் குழு பொலிஸாரிடம் சிக்கினார்கள் -

யாழ். கோண்டாவில் பகுதியில் நேற்று வாள்களுடன் சென்ற குழுவினரை அப்பகுதி மக்கள் அடித்து துரத்திய நிலையில் அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள கடையொன்றில் வாள்களுடன் சென்று கொள்ளையிட முயன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பொதுமக்களிடம் அடிவாங்கிய குறித்த நபர்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ,பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கொக்குவில், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் இரும்பு குழாய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு