வட்டுக்கோட்டையில் பதிவாகியது முதலாவது தேர்தல் வன்முறை !!

ஆசிரியர் - Editor II
வட்டுக்கோட்டையில் பதிவாகியது முதலாவது தேர்தல் வன்முறை !!

ஈழத்தமிழர் வரலாற்றில் அரசியல் ரீதியிலான பல விடயங்களின் தொடக்கம் வட்டுக் கோட்டைத் தொகுதியாகும். வட்டுக்கோட்டை சங்கானையில் முதலாவது தேர்தல் வன்முறை நேற்றுப் பதிவாகியது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரது வீடு மீது கழிவு ஒயில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வலி. மேற்குப் பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரான கதிரவேலுவின் சங்கானையிலுள்ள வீட்டின் மீதே நேற்று இனந்தெரியாதோரால் கழிவு ஒயில் வீசித் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளரும் உள்ளூராட்சித் தேர்தலில் அந்தப் பகுதிக்கான கட்சியின் பிரதிநிதியுமான நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தாக்குதல் நடந்த இடத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தல் வெளியானது முதல் நேற்று வரையான காலப்பகுதியில் தேர்தல் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் நான்கு நாடு முழுவதும் பதிவாகியுள்ளன என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு